tamilnadu

ஒன்றிய அரசை கண்டித்து மே 20 புதுச்சேரியில் முழு அடைப்பு

ஒன்றிய அரசை கண்டித்து  மே 20 புதுச்சேரியில் முழு அடைப்பு

புதுச்சேரி, ஏப்.24- ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து மே 20 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தை வெற்றி பெற செய்ய சிஐடியு வேண்டுகோள் விடுத்துள்ளது. சிஐடியு புதுச்சேரி மாநிலக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் பிரபுராஜ் தலை மையில் முதலியார் பேட்டையில் நடை பெற்றது. கூட்டத்தில் சிஐடியு மாநில செயலாளர் சினுவாசன், நிர்வாகி கள் ரவிச்சந்திரன், கொளஞ்சியப்பன், மதிவாணன், ராமசாமி,ராஜ்குமார், தினேஷ்குமார்,பச்சமுத்து, வடிவேலு, மணிபாலன், கலியன் மற்றும் மாநில குழு உறுப்பினர்கள்  ஆகியோர் கலந்து கொண்டனர். குறைந்தபட்ச கூலியை நிர்ணயம் புதுச்சேரி என்.ஆர்.காங்., பாஜக  கூட்டணி அரசு  கடந்த 8ஆண்டுகளாக உயர்த்தாமல் உள்ள குறைந்தபட்ச ஊதி யத்தை தற்போது உள்ள விலைவாசிக்கு  ஏற்றார் போல் நிர்ணயம் செய்ய   வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். ஆட்டோ தொழி லாளர்களுக்கு அரசு கொடுத்த வாக்குறுதி யின்படி ஆட்டோ செயலி,  சட்டவிரோத இருசக்கர வாகன நிலையங்களை தடை செய்தல், ரேபிடோ பைக் டாக்ஸியை செயலியை முடக்கம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகள் மீது முதலமைச்சர்  உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலையோர விற்பனை குழு தேர்தலை புதுச்சேரி நகராட்சி உடனடியாக நடத்திட வேண்டும். முழு அடைப்பு போராட்டம் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து  மே 20 ஆம் தேதி புதுச்சேரியில் சிஐ டியு சார்பில் நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் அனைத்து தொழி லாளர்களும் முழுமையாக பங்கேற்று வெற்றி பெற செய்வது என்று முடிவு கூட்டத்தில் செய்யப்பட்டது.

பாகூரில்  சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம்

புதுச்சேரி, ஏப்.24- பொலிவுறு நகர திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை சூறையாடப்படுவதை எதிர்த்து புதுச்சேரி மாநிலம், பாகூரில்  சிபிஎம் மக்கள் சந்திப்பு இயக்கம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி செயலாளர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இந்த இயக்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள்,தமிழ்ச்செல்வன்,மாநிலக்குழு உறுப்பினர் கலியன் உள்ளிட்ட கமிட்டி  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நகர குடிநீர் மேம்பாட்டு திட்டத்திற்காக, விவசாயிகள் நிறைந்த புதுச்சேரி நெற்களஞ்சியமான பாகூர் முதல் கரையாம்பத்தூர் வரை உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரை மற்றும் சங்கராபரணி ஆறு, மலட்டாறு உள்பட கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளில் 80 க்கும்   மேற்பட்ட ஆழ்துளை போர்வெல்கள்   அமைக்கும் திட்டத்தை திரும்ப பெற வேண்டும், புதிய மதுபான தொழிற்சாலைகளின் தேவைகளுக்காக இந்தத் திட்டத்தை அரசு கொண்டு வருகிறதே தவிர புதுச்சேரி நகரத்தில் உள்ள மக்களுக்காக அல்ல. மேலும் 24 மணி நேரமும் தடையில்லா குடிநீர் விநியோகம் என்று நகர மக்களை ஆசை வார்த்தை கூறி குடிநீரை பெரிய வணிகப் பொருளாக மாற்றி மின்சாரம் போல் பிரிபெய்டு மீட்டர், ஸ்மார்ட் மீட்டர் என கொள்ளையடிக்கும் முயற்சியை புதுவை அரசு மேற்கொள்கிறது. நெற்களஞ்சியத்தை பாலைவனமாக மாற்றி, உணவு மற்றும் குடிநீர் பஞ்சத்தை மக்கள் மீது திணிக்கும் இத்திட்டத்தை என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு கைவிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாகூர் கொம்யூன் கமிட்டி சார்பில் வருகின்ற ஏப்ரல் 26, 27 தேதிகளில் மக்கள் சந்திப்பு நடைப்பயண  பிரச்சார இயக்கத்தை பாகூர் உள்ளிட்ட அதனை சுற்றி உள்ள கிராமப்புற பகுதிகளில் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.