கால்வாய் பணியின் போது
பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4ஆவது வார்டில் மழைநீர் கால்வாய் பணிகள் கடந்த மூன்று ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம் பணிகளை செய்து வருகிறது. பணியின் போது பல வீடுகளின் சுற்று சுவர்கள் இடிந்து விழுந்தன. பல வீடு களின் மின் இணைப்பு கேபிள்கள் அறுக்கப்பட்டன. இப்படி பாதிப்புகள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவற்றை சீரமைத்து தர வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் அந்த நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேபிள் வழங்கியது. சிலருக்கு செங்கல், சிமெண்ட், மணல் வழங்கியது. ஆனால் கட்டுமான பணிக்கான தொகையை வழங்கா மல் கடந்த 18 மாதங்களாக காலம் கடத்தி வந்தனர். இந்நிலையில் சிபிஎம் மாமன்ற உறுப்பின,ர் மார்ச் 24ஆம் தேதி முதல் காலவரையறையற்ற உண்ணா நிலைப்போராட்டத்தில் ஈடுபடுவதாக அறி வித்தார். உடனே மாநகராட்சி அதிகாரி கள் மாமன்ற உறுப்பினரை சந்தித்து இழப்பீடு களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். உண்ணாவிரதம் கைவிடு மாறு கேட்டுக் கொண்டனர். இதையடுத்து முதலில் பாதிக்கப்பட்ட ஆபிரகாமுக்கு ரூ.30 ஆயிரம், சம்பந்தம் என்பவருக்கு ரூ. 20 ஆயிரம் பிரபாகர் என்பவருக்கு ரூ.25 ஆயிரம் , ஆயிஷா என்பவருக்கு ரூ.25 ஆயிரம் வீதம் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் முன்னிலையில் ஒப்பந்ததாரர் வழங்கினார். மேலும் சிலருக்கு ஒரு வாரத்தில் வழங்குவதாக உறுதி அளித்தார். கால்வாய் பணிகள் துரிதமாக நடைபெற வரும் 25ஆம் தேதி மண்டல அலுவலர் மற்றும் மண்டல தலைவர் முன்னிலையில் பேசுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. இதில் அதிகாரிகள் நமச்சிவாயம், நாகராஜ், ஒப்பந்த நிறுவன பொறியாளர் பிரவின், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், வடக்கு பகுதிச் செயலாளர் கதிர்வேல், நிர்வாகிகள் கே.வெங்கடையா, அலமேலு, புஷ்பா, குமார் உள்ளிட்ட பலர் இருந்தனர்.