tamilnadu

img

கீழடிக்கு வருக உலகத் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு

சென்னை,செப்.28-  சிறந்த பாரம்பரிய சுற்றுலா தளமாக கீழடி  தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று தமிழக நிதி-மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரி வித்துள்ளார்.

உலகின் முன்னோடி இனமான பழந்தமிழர் நாகரிகத்தின் தொட்டிலாய் விளங்கும் கீழடியில்,  முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில், ரூ. 18.8 கோடி செலவில் அருங்காட்சியகம் அமைக் கப்பட்டு, கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 

பழந்தமிழ் சமூகத்தின் முற்போக்கு சிந்த னைகள் பொருந்திய ஏறத்தாழ 11 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட் கள் கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. தினந்தோறும் ஆயி ரக்கணக்கான மக்கள் இந்த அருங் காட்சியகத்தை உள்ளம் குளிர கண்டு களிக்கின்றனர். இந்நிலையில், ஒன்றிய அரசின் சுற்றுலாத்துறை சார்பில், ‘சிறந்த பாரம்பரிய சுற்றுலா தலமாக கீழடி  தேர்வு செய்யப்பட்டுள்ளது, திராவிட மாடல்  அரசுக்குப் பெருமை!

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் அழைப்பு

இந்நிலையில் கீழடிக்கு வர வேண்டும் என்று உலகத் தமிழர்களுக்கு முதல மைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

“உலகெங்கும் வாழும் தமிழர்களே…கீழ டிக்கு வருக… நம் வரலாற்றைப் பருக…!” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.