கலை அறிவியல் கல்லூரிகள்
முதலாம் ஆண்டு வகுப்பு நாளை தொடக்கம்
சென்னை, ஜூலை 1- தமிழ்நாட்டில், கலை- அறிவியல் கல்லூரிகளில் முத லாம் ஆண்டு மாண வர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மே 30 முதல் தொடங்கி நடைபெற்றது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கலை - அறிவியல் கல்லூரி களில் முதலாம் ஆண்டுக்கான வகுப்பு கள் ஜூலை 3 அன்று துவங்குவதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
முதலாம் ஆண்டுக்கான முதல் பரு வத் தேர்வுகள் (செமஸ்டர்) அக். 31-இல் தொடங்கி, நவ. 25 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிச. 16 ஆம் தேதி அனைத்து கல்லூரிகளுக்கும் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இந்த கால அட்டவணையை அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகள் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சொத்துக்களுக்கான புதிய வழிகாட்டி மதிப்பு அமலானது
சென்னை, ஜூலை 1- தமிழ்நாட்டில் விக்கிரவாண்டி தொகுதி தவிர மற்ற பகுதிகளில் சொத்துக்களுக் கான புதிய வழிகாட்டி மதிப்பு ஜூலை 1 முதல் அமலுக்கு வந்தது.
வரைவு வழிகாட்டி மதிப்பு பொது மக்கள் பார்வையிட ஏதுவாக பதிவுத் துறை இணையதளம், சார்பதிவாளர், வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக் கப்பட்டன. அவற்றின் மீது கருத்துத் தெரி விக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப் பட்டது.
இதையடுத்து, மாவட்டத் துணைக் குழு 3 வது முறையாக கூடி, வரைவு சந்தை மதிப்பு வழிகாட்டியின் மீது பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆட்சே பணைகள், கருத்துக்களை பரிசீ லித்து, முரண்பாடுகளை களைந்து, புதிய சந்தை வழிகாட்டி மதிப்பை அங்கீ கரித்தது. இது மைய மதிப்பீட்டுக் குழு வுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.
பதிவுத்துறை தலைவர் தலைமை யில் மைய மதிப்பீட்டு குழு, கடந்த ஜூன் 29 அன்று கூடி, புதிய வழிகாட்டி மதிப் புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதையடுத்து ஜூலை 1 முதல் புதிய வழிகாட்டி மதிப்பு, விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி நீங்கலாக தமி ழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது.
அதிநவீன சொகுசு பேருந்து சேவை! முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னை, ஜூலை 1- சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற் காக 3 கோடி ரூபாய் மதிப்பிலான 35 இருக்கைகள் கொண்ட 4 பேருந்துகள் மற்றும் 18 இருக்கைகள் கொண்ட 1 பேருந்து என 5 புதிய அதிநவீன சொகுசு சுற்றுலா பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (ஜூலை 1) துவங்கி வைத்தார்.
தலைமைச் செயலகத்தின் நுழைவு வாயில் அருகில் நடந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதய நிதி ஸ்டாலின், சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைவர் க. மணிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பேருந்துகளில் நீண்ட தூரம் மற்றும் நீண்ட நாட்கள் சுற்றுலாப் பய ணம் மேற்கொள்ள குளிர்சாதன வசதி. மிதவை அமைப்பு வசதி, வாகனத்தின் இருப்பிடத்தை அறிய ஜிபிஎஸ் கருவி, வைபை வசதி, ஒவ்வொரு இருக்கையி லும் போன் சார்ஜ் செய்யும் வசதி உள் ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
மருத்துவத் துறை புதிய செயலர் சுப்ரியா சாகு
சென்னை, ஜூலை 1- தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதி காரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள னர். அந்த வகையில் வனத் துறை செய லாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்து வத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள் ளார். மருத்துவத் துறை செயலாளராக இருந்த ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறை முகங்கள் துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை முதன்மை செய லாளராக சந்திர மோகன் நியமிக்கப்பட் டுள்ளார். நீர்வளத் துறை கூடுதல் செய லாளராக இருந்த சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.