சென்னை, ஜன. 29 - உயர்கல்வி நிறுவனங்களில் பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடங்களை பொதுப்பிரிவினருக்கு மாற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் முயற்சிக்கு கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேரா.சோ.சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக் கையில், இட ஒதுக்கீட்டிற்கான பணியிடங்களை தகுதியானவர் களை கொண்டு நிரப்ப வேண்டும்.
அவ்வாறு செய்ய முடியாத போது அந்த இடங்களை பின்னடைவு பணி யிடங்கள் அறிவித்து, தகுதியான இட ஒதுக்கீடு பிரிவினைக் கொண்ட பின்னர் நிரப்பப்படும்.
இதற்கு மாறாக, மத்திய பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசு நிதியுதவி பெறும் பல்கலைக் கழகங்கள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நிரப்பப்படாமல் இருக்கும் இட ஒதுக்கீட்டிற்கான இடங்களை மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும். தகுதியான இட ஒதுக்கீடு பிரிவினரால் நிரப்ப முடியவில்லை என்றால், அந்த இடங்களை பொதுப் பிரிவினருக்கு ஒதுக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இட ஒதுக்கீடு பிரிவினர் தகுதி யான நபர்கள் இல்லையென்றால், அவர்களுக்கு தகுந்த பயிற்சி அளித்து, அவர்களைக் கொண்டே அந்த இடங்கள் நிரப்பப்படுவதே சமூக நீதி. இதற்கு மாறாக செய் வது, இட ஒதுக்கீடு கொள்கையை நீர்த்து போகச் செய்யும். எனவே, இந்த வரைவு அறிக்கையை உடனே திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.