tamilnadu

img

காட்பாடியில் 638 தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்

காட்பாடியில் 638 தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர், மே 13 - வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள சன்பீம் பள்ளி மைதானத்தில் தனியார் பள்ளி பேருந்து கள் வருடாந்திர கூட்டாய்வு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி களின் 638 தனியார் பள்ளி பேருந்துகளும் ஓட்டு நர்களும் பங்கேற்றனர்.  வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்பு லட்சுமி பேருந்துகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  பேருந்து களை முறையாக இயங்கு கிறதா? அவசர கால ஜன்னல்களும் வழிகளும் பேருந்துகளில் முறையாக உள்ளதா? தீ தடுப்பு சாதனங்கள் பேருந்தில் காலாவதியாகாமல் உள்ளனவா? மேலும் முதலுதவி பெட்டிகளும் பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் வருவாய் துறை தீயணைப்பு துறை காவல் துறை இணைந்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு பயிற்சிகளை தீய ணைப்பு துறை அலுவலர் முருகேசன் செய்து காண்பித்தார். பின்னர் கண் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர்,“வேலூர் மாவட்டத்தில் உள்ள  137 தனியார் பள்ளிகளின் 638 பேருந்துகள் பள்ளி  வாகனங்களை ஆய்வு செய்தோம். அடுத்தாக, குடி யாத்தத்தில்236 தனியார் பள்ளி பேருந்துகளை ஆய்வு  செய்ய உள்ளோம். ஆய்வின் போது குறைபாடு உள்ள பேருந்துகளுக்கு ஒரு வாரகாலம் கால அவ காசம் அளித்து, குறைபாடு களை சரி செய்த பின்னர் மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்தும்.மேலும் பள்ளி பேருந்தில் அவசர கால வழி கேமரா,மற்றும் முதலுதவி பெட்டிகள் தீ தடுப்பு கருவிகள் ஆகியவைகள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தி யுள்ளோம்”என்றார்.