சென்னை, மே 20- அயோத்திதாசப் பண்டிதரின் 175வது ஆண்டு பிறந்த நாள், தமிழ் நாடு அரசின் சார்பில் திங்களன்று (மே 20) சென்னை கிண்டியிலுள்ள மணிமண்டபத்தில் கொண்டாடப்பட்டது.
அங்கு அலங்கரித்து வைக்கப் பட்டிருந்த பண்டிதர் அயோத்திதாச ரின் சிலைக்கு மாலையணிவித் தும், உருவப் படத்திற்கு மலர்தூவி யும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய் தித்துறை செயலாளர் இல. சுப்பிர மணியன், செய்தி மக்கள் தொடர் புத்துறை இயக்குநர் இரா. வைத்தி யநாதன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். அரசு உயர் அலுவ லர்கள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக, அயோத்திதாசரின் பிறந்த நாளை முன்னிட்டு, தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டிருந்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமி ழன்’, ‘திராவிடன்’ என்ற இரு சொற் களையும் அரசியல் அடையாளச் சொற்களாக மாற்றிய திராவிடப் பேரொளி அயோத்திதாசப் பண்டி தர் அவர்களின் பிறந்தநாளில் சமத் துவத்தை நோக்கிய நமது பாதை யில் திண்ணமாக நடைபோட உறுதி யேற்போம்! முற்போக்கு இந்தியா வைப் படைப்போம்!” என்று குறிப் பிட்டிருந்தார்.