tamilnadu

img

நாளை மருந்துக்கடைகள் மூடல்....

சென்னை 
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிகழ்ந்த போலீஸ் காவல் மரணத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு வணிக சங்கங்கள் அமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அறிவித்துள்ளார். 

இதற்கு ஆதரவு தெரிவிப்பதாக மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ள நிலையில், நாளை காலை 7 மணிமுதல் 11 மணி வரை 4 மணிநேரம் மருந்துக்கடைகள் அடைக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

;