சென்னை,பிப்.2- சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், பகுதி-33, வார்டு-149, பிருந்தாவன் நகர் மயானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படு வதால், வரும் 29ம் தேதி வரை மயானம் இயங்காது. மேலும், பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் வார்டு-151, போரூர் மின்சார மயானத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னைமாநகராட்சி அறிவித்துள்ளது.