tamilnadu

தூய்மை சார்ந்த விழிப்புணர்வு  வாசகங்கள் எழுத உத்தரவு 

 சென்னை, ஜூன் 22- அனைத்து பள்ளிகளின் சுவர்களில் தூய்மை  சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தர விட்டுள்ளது. இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர கம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், தூய்மை இந்தியா தினமான காந்தி பிறந்த நாளை முன்னிட்டு அனைத்து பள்ளிகளின் சுவர்களிலும் தூய்மை சார்ந்த விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும்  பள்ளிகளில் சுவர், கழிப்பறைகளில், அசுத்தத்தை  அகற்றி நோயை ஒழியுங்கள், சாப்பிடும் முன்,  கழிவறையை பயன்படுத்திய பின் கைகளை சோப்பால் கழுவவும் போன்ற தூய்மை சார்ந்த  விழிப்புணர்வு வாசகங்களை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுவரில் பச்சை நிறத்தில் பெயிண்ட் அடித்து, எழுத்துக் கள் அனைத்தும் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் எனவும் இதற்கான செலவினங்கள் அரசு சார்பில் வழங்கப்படும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது.