tamilnadu

img

பாமகவினர் மோதல்- படம் எடுத்த செய்தியாளர் மீது தாக்குதல்

தருமபுரி, ஏப். 5-


பென்னாகரத்தில் மோதலில் ஈடுபட்ட பாமகவினரை படம் எடுத்த செய்தியாளரை அக்கட்சியினர் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த செய்தியாளர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவேட்பாளர் அன்புமணி இராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் பாமக நிறுவனர் இராமதாஸ் பங்கேற்ற பிரச்சார கூட்டம் வெள்ளியன்றுநடைபெற்றது. இந்த கூட்டம் முடிந்து சென்றபோது பணம் விநியோகம் தொடர்பாக அக்கட்சியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, அதனை படம் எடுக்க முயன்ற தினமணி செய்தியாளர் சுரேஷை பாமகவை சேர்ந்த சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த செய்தியாளர் சுரேஷ், பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

;