சென்னை,பிப்.26- மாநகர் போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவுப் போக்கு வரத்து கழகங்களில், கடந்த 25 ஆண்டு களுக்கு மேல் விபத்தில்லாமல் பணி புரிந்த ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாண யமும், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த ஓட்டுநர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டுச் சான்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வழங்கி னார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வரின் உத்தரவுக் கிணங்க, திங்களன்று (பிப். 26) மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணி மனையில், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மாநகர் போக்கு வரத்துக் கழகத்தில், கடந்த 10 ஆண்டு களுக்கு மேலாக விபத்தில்லாமல் பணிபுரிந்த மாநகர் போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 335 ஓட்டு நர்களுக்கு தலா 100 கிராம் வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றி தழ்களை வழங்கினார்.
மேலும், அரசு விரைவுப் போக்கு வரத்துக் கழகத்தில், கடந்த 25 ஆண்டு களுக்கு மேல் விபத்தில்லாமல் பணி புரிந்த ஒரு ஓட்டுநருக்கு 4 கிராம் தங்க நாணயமும், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பணிபுரிந்த 24 ஓட்டுநர் மற்றும் ஓட்டுநர் உடன் கூடிய நடத்து நர்களுக்கு வெள்ளி நாணயம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து, பணியின் போது இறந்த பணியாளர்கள் 6 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் நடத்துனர் பணி நியமன ஆணையை வழங்கி னார். இவ்விழாவில், மாநகர் போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா.மோகன், உயர் அலு வலர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட னர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.