tamilnadu

img

கட்டுமானப் பொருட்களின் விலையை அரசே நிர்ணயம் செய்ய சிஐடியு வலியுறுத்தல்

விழுப்புரம், ஜூலை 3- இந்திய தொழிற்சங்க மையம் சிஐடியு-வின் விழுப்புரம் மாவட்ட 9ஆவது மாநாடு ஏஎஸ்ஜி திருமண மண்டபத்தில் மாவட்டத் தலைவர் பி.குமார் தலைமை யில் நடைபெற்றது.  மாவட்ட துணைச்செயலாளர் ஏ.சகா தேவன் சங்க கொடியை  ஏற்றினார். டிஎன்எம்எஸ் ஆர்ஏ மாவட்டச் செயலாளர்  பி.அருள்ஜோதி அஞ்சலி  தீர்மானத்தை முன்மொழிந் தார். கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வி.பாலகிருஷ்ணன் வரவேற்  றார். சிஐடியு உதவித் தலை வர் ஏ.கிருஷ்ணமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். மாவட்டச் செய லாளர் எஸ்.முத்துக்குமரன் வேலை அறிக்கையையும், பொருளாளர் கே.அம்பிகா பதி வரவு செலவு அறிக்கை யையும் சமர்ப்பித்தார். கட்டுமான தொழிலாளர்க ளுக்கு நலவாரிய பணப் பயன்களை உடனே வழங்க  வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்யும் தொழிலா ளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், ஒன்றியம் வாரியாக மணல்  குவாரி அமைத்து மாட்டு வண்டியில் மணல்  அள்ள அனுமதி வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட  கட்டுமான தொழிலாளர்க ளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், அமைப்பு சார தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம் உள் ளிட்ட பணப் பயன்களை உட னடியாக வழங்க வேண்டும், கம்பி, சிமெண்ட், மணல்  உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும், கட்டுமான தொழி லாளர்களுக்கு அரசு தொகுப்பு வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் ஆர்.டி.முருகன்,  அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். உதவி  பொதுச்செயலாளர் கே. திருச்செல்வம் மாநாட்டை  நிறைவு செய்து பேசினார். திட்டச் செயலாளர் ஆர்.சேகர் நன்றி கூறினார். புதிய மாவட்டத்  தலைவ ராக எஸ்.முத்துக்குமரன்,  செயலாளராக ஆர்.மூர்த்தி,  பொருளாளராக வி.பால கிருஷ்ணன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.