கடலூர், மே 26- வெளிமாநில ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு ஊதியம் வழங்குவதுடன் அவர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி வைக்க நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.கருப்பையன் வலி யுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவ டிக்கையாக பொதுமுடக்கம் அமல்படுத்தப் பட்டு 60 நாட்கள் ஆகிறது. பொதுமுடக்கம் அறி விக்கும் போது தனியார் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் பணிபுரியும் தொழி லாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. கடலூர் மாவட்டத்தில் என்எல்சி, சிப்காட் மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரி யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதில் பெரும்பகுதி ஒப்பந்த தொழிலாளர்கள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பி டத்தக்கது. என்எல்சி-யில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் முழுமையாக (26 நாட்கள்) வழங்கா மல் குறைத்து வழங்கியுள்ளனர். இவர்க ளுக்கு முழு ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் சிப்காட் பகுதியில் டான்பாக், டாக்ரோஸ், சொலாரா, கிளாரி யன்ட் போன்ற தொழிற்சாலைகளில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இந்த தொழிலாளர்க ளுக்கும் ஊதியம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமுடக்கம் தளர்த்தப்பட்டு 50 விழுக்காடு தொழிலாளர்களோடு தொழிற் சாலைகளை இயக்கலாம் என அரசு அறி வித்த பிறகு தற்போது தொழிற்சாலைகள் இயங்கத் துவங்கியுள்ளன. ஆனால் கட லூர் சிப்காட்டில் உள்ள தொழிற்சாலை களில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அமல்படுத்துவது இல்லை. குறிப்பாக சென்னை போன்ற வெளி மாவட்டத்தி லிருந்து வரும் தொழிலாளர்களை கொரானா பரிசோதனை செய்யாமல் தொழிற்சாலை யில் வேலை செய்ய அனுமதிக்கின்றனர். தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்களை அழைத்து செல்லும் பேருந்து வேன்கள் மற்றும் உணவகங்களிலும் (கேண்டின்) தனி மனித இடைவெளி பின்பற்றுவதில்லை. எனவே அனைத்து தொழிற்சாலைகளிலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமுடக்கம் அமுல்படுத்தியதின் கார ணமாக வெளிமாவட்ட தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். தற்போது தொழிற்சாலை இயங்கினாலும் பேருந்து, ரயில் போக்குவரத்து இல்லாத நிலை யில் அவர்களால் பணிக்கு திரும்ப முடிய வில்லை. ஆனால் ஆலை நிர்வாகங்கள் தொழிலாளர்களை உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும் எனவும், பணிக்கு வர வில்லை என்றால் ஊதியம் வழங்கப்பட மாட்டாது எனக் கூறுகின்றனர். இது பொருத்த மானதல்ல. எனவே பொது போக்குவரத்து துவங்கும் வரை வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு வராத தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்எல்சி சிப்காட் மற்றும் இதர பல நிறுவனங்களில் பல்லாயி ரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர் கள் பணிபுரிகின்றனர். என்எல்சியில் எஸ்பி சிஎல், எடாக், பவர் மேக் போன்ற அவுட் சோர்சிங் கம்பெனிகளில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கும், சிப்காட் ஆலைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் மாதம் ஊதியம் வழங்கப்படவில்லை. இவர்களுக்கு ஊதியம் கிடைத்திட ஆவண செய்வதோடு சொந்த மாநிலங்களுக்கு செல்ல விருப்பமுள்ள தொழிலாளர்களை உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப் பட்டுள்ளது.