சாந்தனு குப்தாவின் ‘நான் மோடிக்கு வாக்களிக்க 101 காரணங்கள்’ என்ற நூலை பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் பாராட்டியுள்ளார். “சாய்னா நேவால் நாட்டு மக்களை தவறாக வழிநடத்தக் கூடாது. அவர் நாட்டை நேசிப்பவர், உண்மையான நடுநிலையாளர் என்றால், ‘மோடிக்கு நாட்டு மக்களின் 108 கேள்விகள்’ என்ற நூலையும் முழுமையாகப் படிக்க வேண்டும். அவற்றிற்கான பதில்களை பிரதமரிடம் இருந்து கேட்டுப் பெற்றுத் தர வேண்டும்” என்று அமைச்சர் மனோ தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.