அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், பாலர் சங்கம் ஆகிய அமைப்புகளின் தாம்பரம் பகுதி, தேவநேசன் நகர் கிளைகள் சார்பில் ஞாயிறன்று (நவ.17) எம்ஜிஆர் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற ஓவியம், பேச்சு உள்ளிட்ட போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு க.வெ.ராதாகிருஷ்ணன், த.கிருஷ்ணா, முருகானந்தம், பிரேமாவதி, சு.விஜயா, துரை வேலு, சரண்யா, தாரா, சித்ரா, அனில் குமார், சீனிவாசன், யுகேஸ்வர், சத்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.