திருவள்ளூர்,நவ.18- பெண்கள், குழந்தை களுக்கு எதிரான குற்ற வழக்குகளை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரு கிறார்கள். திருவள்ளூர் மாவட்ட த்தில், இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரை 1269 பெண்கள் காவல் நிலையத்தை உதவிக்காக அணுகியுள்ளனர். அவர்க ளில், சுமார் 640 பேர் குழந்தை யுடன் காவல் நிலையத்தை அணுகி இருக்கிறார்கள். இதனையடுத்து திருவள்ளூர் மாவட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் குற்றத் தடுப்பு காவல்துறை பிரிவும், இன்டர்நேஷனல் ஜஸ்டிஸ் மிஷன் என்ற அமைப்பும் இணைந்து மாவட்டத்தில் 5 அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை தேர்ந்தெடுத்து அதில் தனியாக குழந்தைகள் நேய பாதுகாப்பு நிலையத்தை திறக்க முடிவுசெய்தது. அதன்படி முதல் கட்டமாக திங்களன்று (நவ.18) திருவள்ளூர், திரு த்தணி மற்றும் ஊத்துக்கோட்டையில் குழந்தை நேய காவல்நிலை யம் திறக்கப்பட்டது. இதற்காக மகளிர் காவல் நிலையங்களில் தனி அறை ஒதுக்கப்பட்டு உள்ளன. திருவள்ளூரில் குழந்தை கள் நேய பாதுகாப்பு நிலையத்தை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். குழந்தைகள் நேய காவல்நிலைய சுவற்றில் கார்ட்டூன் படங்கள் வரை யப்பட்டு உள்ளது. அந்த அறையில் குழந்தைகள் விளையாட்டு உபகரண ங்கள், சாப்பிடும் வசதிகளும் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கு சம்பந்தமாக குழந்தைகளிடம் தகவல் சேகரிக்கும் போதும் அவர்களை அணுகும் போதும் குழந்தைகளுக்கான சிறப்பு காவல் நிலையத்தில் குழந்தைகள் நேய முறையில் அணுக வலியுறுத்தப்பட்டு உள்ளது.