சென்னை, ஜூன் 19- பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வும், பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக இளை ஞர் நலன், விளையாட்டு மேம்பாடு மற்றும் சிறப்புத் திட்ட செயலாக் கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், போக்சோ சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நடந்த ஆய்வுக் கூட்டத்தில் போக் சோவிற்கு என தனி இணையதளம் உருவாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார்.
இந்தநிலையில் https://www. pocsoportal.tn.gov.in என்ற போக்சோ இணையதளம், தனிநபர் பராமரிப்பு திட்ட செயலி, குழந்தை பராமரிப்பு இல்லங்களை ஆய்வு செய்வதற்கான செயலி, கைம் பெண்கள் மற்றும் ஆதரவற்ற மக ளிர் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான கைபேசி செயலி போன்ற புதிய செயலிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சமூக நலத் துறை அமைச்சர் கீதா ஜீவன், செய லாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், ஆணை யர் வே. அமுதவல்லி உட்பட அதி காரிகள் கலந்து கொண்டனர்.
போக்சோ இணையதள முகப்பு மூலம், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான வழக்குகளை காவல் துறை, போக்சோ நீதிமன்றம், மக ளிர் நீதிமன்றம் மற்றும் குழந்தை கள் நலன் மற்றும் சிறப்பு சேவை கள் துறை ஆகிய துறைகள், விவ ரங்களை உடனுக்குடன் பதிவு செய்யவும், பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்பட்டது முதல் நீதி மன்றத்தில் இறுதி தீர்ப்பு பெறும் வரை, ஒவ்வொரு நடவடிக்கையும் அத்துறை சார்ந்த உயர் அலுவ லர்கள் கண்காணித்து வழக்கை விரைவுபடுத்த முடியும்.
மேலும், பாதிக்கப்பட்ட குழந் தைகளுக்கான இழப்பீட்டு தொகை யை தாமதமின்றி இணையதளம் மூலம் நேரடியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தவும், துறை சார்ந்த உயர் அலுவலர் களால் வழக்கு துரிதமாக தீர்வு செய்வதை கண்காணிப்பதற்கும் இந்த இணையதளம் பயனுள்ள தாக அமையும். குழந்தை தொடர் பான விவரங்கள் யாருக்கும் தெரி யாத வகையில் இந்த இணைய தளம் வடிவமைக்கப்பட்டு உள் ளது.