கனமழை: மருத்துவத்துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
சென்னை, நவ.26- வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இந்த சூழலில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த 22 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இந்நிலையில் வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது டெல்டா மாவட்டங்களை நோக்கி மெதுவாக நகர்ந்து வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். அதன்படி கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிக மழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புகள் உள்ளது. அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை எச்சரிக்கை தொடர்பாக மருத்துவ துறை அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவத் துறை சார்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத் துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாகு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மதுரை எய்ம்ஸ் நிலவரம் குறித்து செயல் இயக்குநர் பேட்டி
இராமநாதபுரம், நவ.26- மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் திட்டமிட்டபடி நடந்து வருகிறது. 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவமனையின் ஒரு பகுதி செயல்பாட்டிற்கு வரும் என்றார் மருத்துவமனை செயல் இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ். இராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய செயல் இயக்குநர் எம்.ஹனுமந்த ராவ், தற்போது மருத்துவக் கல்லூரிக்கான வகுப்பறைகள், மாணவர்கள் விடுதி (ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும்), புறநோயாளிகள் பிரிவு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரிவுகளின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை 12 மாதங்களுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். இப்பணிகள் நிறைவடைந்தவுடன், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் வகுப்புகள், தங்கும் விடுதிகள் மதுரைக்கு மாற்றப்படும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் எப்போது முழுமையாக நிறைவடையும் எனக்கேட்டதற்கு பதிலளித்த ஹனுமந்த ராவ், 2027-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவமனைப் பணிகள் நிறைவடையும் என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு மருத்துவமனையில் அனுமதி!
சென்னை,நவ.26-
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மருத்துவ மனையில் செவ்வாய்க்கிழ மை(நவ.26) அனுமதிக்கப் பட்டுள்ளார்.
சென்னை ஆயிரம் - விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை யில் காய்ச்சல் காரண மாக அமைச்சர் நேரு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவர் சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்புவார் என்று தகவல்கள் தெரிவிக் கின்றன.
ரிசர்வ் வங்கி ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
சென்னை,நவ.26- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், ‘அசிடிட்டி’ காரணமாக செவ்வாய்க்கிழமை சென் னையில் உள்ள கார்ப்பரேட் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய வங்கியின் செய்தித் தொடர்பாளர் ராய் ட்டர்ஸ் செய்தி நிறு வனத்திடம் கூறுகையில், ‘அசிடிட்டி’ காரணமாக சக்திகாந்த தாஸ் மருத்து வமனையில் அனுமதிக்கப் பட்டார் என்றும், கவலைப் பட வேண்டிய நிலை இல்லை என்றும் கூறினார். “அவர் இப்போது நல மாக இருக்கிறார். அவரது உடல்நிலை மருத்துவர் களால் கண்காணிக்கப்படு கிறது” என்றும் தெரிவித்துள் ளார்.