சென்னை,டிச.28- சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில், சிறப்பு மலரை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட, முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-
“வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழாவில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ‘தமிழரசு’ அச்சகத்தின் சார்பில் தயாரிக்கப் பட்டுள்ள “வைக்கம் போராட்டம் (1924-2023) நூற்றாண்டு மலரினை” தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று (டிச.28) சென்னை, பெரியார் திடலில் வெளியிட, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பெரியாரின் நினை விடத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பின ராயி விஜயனும் மலர் வளையம் வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எ.வ. வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமி நாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யா மொழி, சென்னை மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, சென்னை, நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற இருந்த “வைக்கம் போராட்டம்” நூற்றாண்டு சிறப்பு விழா, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி முன்னாள் தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி ரத்து செய்யப்பட்டது.
சமூக நீதி வரலாற்றில் திருப்பு முனையாக அமைந்த வைக்கம் போராட்டம் பெரியார் முன்னின்று நடத்தி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எல்லை கடந்து போராடி வரலாற்றில் பல புரட்சிகளை நிகழ்த்திக் காட்டி வெற்றி கண்ட அவரின் நினைவைப் போற்றவும், சமூக நீதிக் கருத்துக் களை பின் வரும் சந்ததியினர் தெரிந்து கொள்ளவும், வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு குறித்த சிறப்புக் கட்டுரைகள் பல்வேறு அறிஞர் பெருமக்களிடம் இருந்து பெற்று அதனைத் தொகுத்து “வைக்கம் போராட்டம் நூற்றாண்டு மலர்” என்ற சிறப்பு மலர் ஒன்றினை தமிழ்நாடு அர சின், செய்தி மக்கள் தொடர்புத்துறை யின் ‘தமிழரசு’ சார்பில் தயாரித்து வெளியிடப்படும் என்று ஒரு அறிவிப்பும் அதில் இடம்பெற்றிருந்தது.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைவராகவும் துறையின் அரசுச் செயலாளர் இரா.செல்வராஜ், துணைத் தலைவராகவும், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்கு நர் த.மோகன், உறுப்பினர்-செய லாளர் ந.அருள் உள்ளிட்டோர் கொண்ட மலர்க்குழு அமைக்கப்பட்டி ருந்தது. மலரில் தமிழ், மலையாளம் மற்றும் ஆங்கில கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.