சென்னை, டிச. 10 - தொழிலதிபர் கவுதம் அதானியை தாம் சந்திக்கவில்லை என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் செவ்வா யன்று (டிச.10) கேள்வி நேரத்திற்கு பின்னர், பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே. மணி, அதானி குழும முதலீடு விவகாரத்தில் தமிழ் நாட்டின் பெயர் பேசப்படுவதால் இது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதில ளித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாட்டில் அதானி நிறுவன முதலீடு குறித்து தவ றான தகவல்கள் பரப்பப்பட்டு வரு கின்றன. அதானி முதலீடு பற்றி பொதுவெளியில் வரும் தகவல் குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்கெனவே பதில் அளித்துள்ளார். நானும் பலமுறை தெளிவுபடுத்தி விட்டேன். அதானி என்னை சந்திக்கவும் இல்லை; நான் அவரை பார்க்கவும் இல்லை. அதானி விவ காரத்தை அரசியலாக்கி வருவதால் நான் இந்த விளக்கத்தை அளிக்கி றேன்” என்றார்.
அதானி விவகாரம் குறித்து நாடா ளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத் தில் விவாதிக்க வேண்டும் என ‘இந்தியா’ கூட்டணி வலியுறுத்து கிறது. பாஜக, பாமக இந்த கோரிக் கையை ஆதரிக்கிறதா? என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஜி.கே. மணி, நாங்கள் ஆதரிக்க தயார் என்று கூறினார். பின்னர் முதலமைச்சர் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்று கூறி பேரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.