சென்னை, டிச.7- பெஞ்சால் புயல் மழையால் ஏற் பட்டுள்ள பாதிப்பை சீரமைக்கும் பணிகளுக்கு, ரூ. 6 ஆயிரத்து 675 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று, புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு வந்துள்ள ஒன்றியக் குழு வினரிடம் முதல்வர் மு.க. ஸ்டா லின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு முதல்வர் கடிதம்
தமிழ்நாட்டில் பெஞ்சால் புயலின் காரணமாக வரலாறு காணாத அதிக கனமழை பொழிவு ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 14 மாவட் டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக் கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது. இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு முதல்வர் கடந்த டிசம்பர் 2-ஆம் தேதி எழுதிய கடி தத்தில், பெஞ்சால் புயலினால் ஏற் பட்ட சேதங்களிலிருந்து தமிழ்நாட்டை மீட்க முதற்கட்ட ஆய்வின்படி தற்கா லிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ. 2 ஆயிரத்து 475 கோடி தேவைப்படு கிறது என குறிப்பிட்டிருந்தார்.
இத்துடன், பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ. 2000 கோடியை உடனடியாக விடுவிப்பது டன், ஒன்றிய பல்துறை குழுவை அனுப்பி சேத விவரங்களை கணக்கி டவும் வலியுறுத்தி இருந்தார்.
ஒன்றியக் குழு வருகை
அதன்படி பெஞ்சால் புயல் பாதிப்பு குறித்து களஆய்வு செய்ய, முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டு கோளுக்கு இணங்க, பல்துறை ஒன்றி யக் குழுவினர் 8 பேர் சென்னை வந்தனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சகத் தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலை மையில் ஒன்றிய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குநர் கே. பொன்னுசாமி, ஒன்றிய நிதித்துறை இயக்குநர் சோனா மணி அனுபம், ஒன்றிய ஜல்சக்தி துறை இயக்குநர் சரவணன், ஒன்றிய சாலை- போக்கு வரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை முன்னாள் பொறியாளர் தனபாலன் குமரன், ஒன்றிய எரிசக்தித் துறை உதவி இயக்குநர் ராகுல் பாட்ச் கேட்டி, ஒன்றிய ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் இயக்குநர் பாலாஜி ஆகியோர் அடங்கிய இந்த குழு வினர், தலைமை செயலகத்தில் முதல் வர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
முதல்வரின் கோரிக்கை மனு
அப்போது, பெஞ்சால் புயலின் தற்காலிக மற்றும் நிரந்தர மறுசீர மைப்பு பணிகளுக்கு ரூ. 6 ஆயிரத்து 675 கோடி வழங்க வேண்டிய முழு விவரங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை முதலமைச்சர் மு.க. ஸ்டா லின் அளித்தார். மேலும், ஒன்றிய குழுவிடம் தமிழகத்திற்கு தேவை யான நிவாரணப் பணிகள், நிரந்தர மற்றும் தற்காலிக மறு சீரமைப்பு பணி களுக்காக நிதியை பெற்றுத்தர விரைந்து பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் வரு வாய் நிர்வாக ஆணையர் ஆகி யோர் பெஞ்சால் புயல் சேத விவ ரங்கள் குறித்து விளக்கப்படக் காட்சி மூலம் ஒன்றியக் குழுவிடம் விளக்கினர்.
இதைத்தொடர்ந்து நடந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் வரு வாய் நிர்வாக ஆணையர் ஆகி யோர் பெஞ்சால் புயல் சேத விவ ரங்கள் குறித்து விளக்கப்படக் காட்சி மூலம் ஒன்றியக் குழுவிடம் விளக்கினர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு
இந்நிலையில், சனிக்கிழமை (டிச.7) காலையில் விழுப்புரத்திற்கு வருகை தந்த ஒன்றிய அரசின் குழு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தை நடத்தியது. அத னைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வை யிட்டனர். அப்போது, ராஜேஷ் குப்தா தலைமையிலான குழுவினர் அரசூர் அருகே உள்ள மலட்டாறு பகுதியை ஆய்வு செய்தனர். அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகளி டம் சேதங்கள் குறித்தும் பாதிப்புகள் பற்றியும் கேட்டறிந்தனர்.
பின்னர், திருக்கோவிலூர் சட்ட மன்ற தொகுதியில் உள்ள அரகண்ட நல்லூர், அரசூர், சிறு மதுரை, விக்கிர வாண்டி, வி.சாத்தனூர் உள்ளிட்ட பல் வேறு இடங்களில் பாதிப்புகளை ஆய்வு செய்தனர். மாவட்ட ஆட்சியர் சி.பழனி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.