tamilnadu

தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம், திருவள்ளூர்

ஆண்டுப்பட்டிகை வழக்கு எண். 155/2019

கடந்த 23.05.2018 அன்று, திருவள்ளூர் மாவட்ட அம்பத்தூர் – 2 சரக மருந்துகள் ஆய்வாளர் அவர்கள், எண்.7/136, குன்றத்தூர் மெயின் ரோடு, கோவூர், சென்னை – 128 என்ற முகவரியில் அமைந்துள்ள NTK பார்மா என்ற மருந்துகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனத்தில் ஆய்வு செய்து, Wincoryl Expectorant என்ற மருந்தின் மாதிரி எடுத்து, அதை சென்னையில் உள்ள அரசு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை பெற்றதில், மேற்படி மருந்தில், Terbutaline Sulphate என்ற மூலக்கூறு 77.60 சதவீதம் மட்டுமே இருந்த காரணத்தால் தரமற்றது என்று அறிக்கை பெற்று, அதன் காரணமாக மேற்படி மருந்து நிறுவனத்தின் உரிமை யாளரான டாக்டர் டி.விஸ்வநாதன் என்பவரை எதிரியாக சேர்த்து, எதிரி மருந்துகள் மற்றும் அழகுச்சாதனச் சட்டப் பிரிவு 18(a)(i) உ/இ பிரிவு 27(dன் கீழ் குற்றம் புரிந்ததாக குறிப்பிட்டு, புகார் இந்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அந்த வழக்கு இந்நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டதில், மேற்படி எதிரி டாக்டர்.டி.விஸ்வநாதன் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு, அவருக்கு மேற்படி குற்றத்திற்கு ஒரு வருட மெய்க்காவல் சிறைத்தண்டனையும், அபராதம் ரூ.20,000/- விதித்தும் கட்ட தவறினால் மேலும் ஒருமாதம் மெய்க்காவல் சிறைத்தண்டனை அளித்தும் இந்நீதிமன்றத்தில் 26.06.2019 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அபாரதத்தொகையான ரூ.20,000/- மேற்படி எதிரியிடம் இருந்து வசூலிக்கப்பட்டது.

ஓம்./- M.ஸ்ரீஜா
தலைமை நீதித்துறை நடுவர்,
திருவள்ளூர்

உண்மை நகர் 
சிரஸ்ததார்(பொ)