சாக்லேட்டுக்கு பணம் தர மறுத்து
கடை மீது காரை ஏற்றியவருக்கு சிறை
சிதம்பரம் காசு கடை தெருவில் உள்ள மளிகை கடையின் மீது காரை ஏற்றி சேதம் ஏற்படுத்திய உதவி பேராசிரியரை கைது செய்த காவல் துறையில் சிறையில் அடைத்த னர். சிதம்பரம் காசு கடை தெருவில் உள்ள மளிகை கடையில் மார்ச் 1 ஆம் தேதி இரவு சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவை சேர்ந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் பாலசுந்தர் (48) சாக்லேட் வாங்கியுள்ளார். அப்போது சாக்லேட்டுக்கு பணம் கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோப மடைந்துள்ளார். இதையடுத்து, தனது வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த அவருக்கு சொந்தமான காரை எடுத்து வந்து மளிகை கடையின் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தி யுள்ளார். அப்போது கடையில் உள்ள வர்கள் கார் கடையில் மோதுவதை அறிந்து அலறி அடித்து ஓடியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மளிகை கடைக் காரர் பிரபாகரன் சிதம்பரம் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் 9 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். சம்பவத்தில் பால சந்தருக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் பாண்டி மகாத்மா காந்தி மருத்துவமனையில் 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், சிகிச்சை முடித்து வீடு திரும்பிய பாலசுந்தரை செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) காவல்துறையினர் கைது செய்து சிறைக்கு அனுப்பினர். சம்பவத்திற்கு பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.