tamilnadu

img

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் : டிசம்பர் 23 வரை சென்னை பல்கலைக்கழகம் விடுமுறை அறிவிப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னை பல்கலைக்கழகம் வரும் டிசம்பர் 23-ஆம் தேதி வரை திடீரென விடுமுறை அறிவித்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது. இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து இந்தியா முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. நாடு முழுவதும் மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் திரண்டு தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக்கழக வளாகத்தில் தினமும் மாணவர்கள் அமைப்பினர் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இதையடுத்து சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் வரும் டிசம்பர் 23-ஆம் வரை விடுமுறை அறிவித்துள்ளது. பல்கலைக்கழகத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என பல்கலைக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே டிசம்பர் 24-ஆம் முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தக் காலகட்டத்தில் நடைபெறும் தேர்வுகள் அனைத்தும் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.