tamilnadu

திடக்கழிவு மேலாண்மைப் பணியில் முன்மாதிரி சென்னை மாநகராட்சி கர்நாடக துணை முதல்வர் பாராட்டு

சென்னை,செப்.3- கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர், சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட நட வடிக்கைகளை செப்டம்பர் 3 அன்று பார்வையிட்டனர். ஆலந்தூர் மண்ட லத்தில் உள்ள உர்பேசர் சுமீத் நிறுவன கண்காணிப்பு அறையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மேற் கொள்ளப்படும் நடவடிக்கைகளை அவர்கள் பார்வையிட்டனர்.

இதனிடையே கர்நாடக துணை  முதல்வர் சிவக்குமார் செய்தியாளர்களி டம் கூறுகையில்,  திடக்கழிவுகள் உரு வாகும் வழிகள் குறித்தும், அதிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிப்பு குறித்தும் அறிந்து கொண்டோம். தமிழக அரசின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டுக்கள்.

இதர மாநிலங்களுக்கும் இந்த திட்டம் முன்னோடியாகும். தமிழக அரசிடமிருந்து நாங்களும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டோம். இவற்றை நாங்களும் பின்பற்றி எங்கள்  மாநிலத்தில் திடக்கழிவு மற்றும் தூய்மைப் பணிகளை மேம்படுத்து வோம். திடக்கழிவு என்பது தேசிய அளவில் முக்கியமான பிரச்சனை. எனவே, திடக்கழிவுகளை முறை யாகக் கையாண்டால் அதிலிருந்து மின்சாரம், இயற்கை எரிவாயு போன்ற பயனுள்ள பொருட்களை தயாரிக்க லாம். திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு சென்னை மாநகரம் முன் மாதிரியாக விளங்குகிறது. அந்த வகை யில் சென்னை மாநகரை நாங்களும் பின்பற்றுவோம்,” என்று தெரிவித்தார். 

“மேகதாது விவகாரம் தொடர்பாக நான் தற்போது விவாதிக்க விரும்ப வில்லை. இதில் நீதிமன்ற உத்தரவை மதிப்போம். இரண்டு மாநிலங்களிலும் மழை நன்றாகப் பொழிந்து உதவி யிருக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் அது கர்நாடகாவைவிட தமி ழகத்துக்கே அதிக பயன் அளிக்கும்,” என்றும் கூறினார். பின்னர் தமிழக இளை ஞர் நலன்- விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்தார்.