tamilnadu

img

சென்னை கிராண்ட் மாஸ்டர் செஸ் நாளை தொடக்கம்

சென்னை,நவ.3- சென்னை கிராண்ட் மாஸ்டர்  செஸ் போட்டிகள் குறித்த அறி விப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,’சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2024 போட்டிகள் வருகிற நவம்பர் 5 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறுகிறது.

இந்த போட்டியை செஸ் சம்மேள னத்தின் ஆதரவுடன் தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்து கிறது. இம்முறை போட்டிகளை மாஸ்டர்ஸ் மற்றும் சேலஞ்சர்ஸ் ஆகிய இரு பிரிவுகளிலும் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று அவர் களின் திறமையை வெளிப்படுத்த உள்ளனர்.

 மாஸ்டர்ஸ் பிரிவில், சமீபத்தில் டபிள்யூ.ஆர். செஸ் மாஸ்டர்ஸ் கோப்பையை வென்ற உலகத் தரவரிசையில் 3 ஆவது இடத்தல் உள்ள இந்திய கிராண்ட் மாஸ்டரான அர்ஜன் எரிகைசி இரண்டாவது முறையாக கலந்து கொள்கிறார். அவருடன் அமெரிக்கா கிராண்ட் மாஸ்டர் லெவோன் அரோனியன், பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டர் மாக்சிம் வாச்சியர் லாக்ரேவ், இந்தியா வின் அரவிந்த் சிதம்பரம் விதித் குஜ்ராத்தி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த தொடருக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது.  ‘புக் மை  ஷோ’ இணையதளத்தில் அல்லது செயலியில் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம். ஒரு நப ருக்கு ரூ. 100 கட்டணம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. செஸ் ஆர்வலர்கள் தங்கள் இருக்கைகளை முன்பதிவு செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.