tamilnadu

img

கோவிட்-19 : சென்னையில் 10,576 பேர் பாதிப்பு

சென்னையில், கோவிட்-19 வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,576 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் 16,277 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 111 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில்  765 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில்,  587 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். சென்னையில் இதுவரை 10,576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 77 பேர் உயிரிழந்துள்ளனர்; 4781 பேர் குணமடைந்துள்ளனர். 

சென்னையில், அதிகபட்சமாக  ராயபுரத்தில் 1,981 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 20 பேர் உயிரிழந்துள்ளனர். தண்டையார்பேட்டையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 11 பேர் உயிரிழந்துள்ளனர். கோடம்பாக்கத்தில் 1,460 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 6 பேர் உயிரிழந்துள்ளனர். தேனாம்பேட்டையில் 1,118 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 8 பேர் உயிரிழந்துள்ளனர். திரு.வி.க.நகரில்  1,188 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 12 பேர் உயிரிழந்துள்ளனர். அடையாரில்  579 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணாநகரில் 867 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 10 பேர் உயிரிழந்துள்ளனர்.