சென்னை, அக். 4- சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 200 வார்டு களுக்கான வாக்காளர் பட்டி யலை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் (பொ) ஆர்.லலிதா ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் அனைத்து கட்சிப் பிரதிநிதி களின் முன்னிலையில் வெளி யன்று (அக். 4) வெளியிட்டார். மேற்படி வாக்காளர் பட்டி யல் பெருநகர சென்னை மாந கராட்சி தலைமையிடம், மண்டல அலுவலகங்கள் 1 முதல் 15 வரை மற்றும் 200 வார்டு அலுவலகங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வெள்ளிக்கிழமை (அக். 4) முதல் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர் குறித்த விவரங்கள் வாக்கா ளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனவா என்பது குறித்து சரி பார்த்துக் கொள்ளலாம். சென்னை மாநக ராட்சிக்கு நடைபெற உள்ள சாதாரண உள்ளாட்சித் தேர்த லில் 200 வார்டுகளுக்கான வார்டு வாரியான வாக்குச் சாவடி பட்டியல் தயாரிக்கப் பட்டு, ஆண் வாக்காளர்க ளுக்கு 78 வாக்குச்சாவடி களும், பெண் வாக்காளர்க ளுக்கு 78 வாக்குச்சாவடி களும், அனைத்து வாக்கா ளர்களுக்கு 5,558 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 5,714 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மொத்த வாக்காளர் எண்ணிக்கை 57,97,652. இதில் குறைந்தபட்சமாக ஆலந்தூர் மண்டலம் வார்டு 159இல் 2,921 வாக்கா ளர்களும், அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 137இல் 54,801 வாக்காளர்களும் உள்ளனர். இதில் வருவாய் அலுவ லர் சுகுமார் சிட்டிபாபு, மாநக ராட்சி அலுவலர்கள், அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சி களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.