tamilnadu

சென்னை ஆல்பர்ட் திரையரங்க கேண்டீன் உரிமம் ஓராண்டுக்கு ரத்து

சென்னை ஆல்பர்ட் திரையரங்க கேண்டீன் உரிமம் ஓராண்டுக்கு ரத்து

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த நித்யா என்பவர் குடும்பத்துடன் ஞாயிறன்று (மார்ச் 2) எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கில் படம் பார்க்க வந்துள்ளார். இதை யடுத்து படத்தின் இடைவேளை நேரத்தில் தியேட்டர் கேண்டினில் குளிர்பானம் வாங்கி தனது குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். அப்போது அந்த குளிர்பானம் முற்றிலும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், எழும்பூர் காவல் நிலை யத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில், ஆல்பர்ட் திரையரங்க கேண்டீன் நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், தாங்கள் தவறான பொருட்களை விற்பனை செய்தி ருந்தால் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தாராள மாக ஆய்வு மேற்கொண்டு எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் தலைமையில் அதிகாரிகள் குழு ஆல்பர்ட் திரையரங்கு கேண்டினில் திங்களன்று சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் குற்றம் சாட்டிய குளிர்பானங்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கூல்ட்ரிங்க்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் எசென்ஸ் பாட்டில்களை எடுத்து, அனுமதி இன்றி கூல்டிரிங்ஸ் தயாரித்தீர்களா? என்ற கேள்விகளை எழுப்பினர். மேலும், உணவுப் பொருட்களை சேர்த்து வைத்தி ருக்கும் கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பாப்கார்ன்கள், தேதி குறிப்பிடாத உணவுப் பொருட்கள் ஆகியவை ஐஸ் பெட்டி யில் வைக்கப்பட்டு இருப்பதையும், பாப்கான்களில் பூஞ்சை கள் படர்ந்து கிடந்து இருப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அந்தப் பெண் குற்றம் சாட்டிய நூற்றுக்கணக்கான குளிர்பான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து கேண்டீன் உரிமத்தை ஓராண்டு  ரத்து செய்து உத்தர விட்டனர்.