சென்னை, மே 12- சென்னை எழும்பூரில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாரம் இரண்டு முறை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:
மே 17 முதல் ஜூன் 30 வரை சென்னை எழும்பூரில் இருந்து வாரம் 2 முறை வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06037) மறு நாள் காலை 8.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
மறுமாா்க்கமாக மே 18 முதல் ஜூலை 1 வரை வாரம் இருமுறை (சனி, திங்கள் கிழமைகளில்) இந்த ரயில் (எண்: 06038) வேளாங் கண்ணியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு எழும்பூா் வந்து சேரும்.
இந்த சிறப்பு ரயில் எழும்பூரி லிருந்து புறப்பட்டு தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பா திரிப்புலியூா், கடலூா் துறைமுகம், சிதம்பரம், சீா்காழி, வைத்தீஸ்வரன் கோயில், மயிலாடு துறை, பேரளம், திருவாரூா், நாகப் பட்டினம் வழியாக வேளாங்கண்ணி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.