கொடூர செயலில் ஈடுபட்ட சைக்கோ கொலையாளி கைது
சென்னை,ஜூன் 12 சென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை துண்டித்து கொடூர செயலில் ஈடுபட்டு வந்த சைக்கோ கொலை யாளியை போலீசார் கைது செய்தனர். சென்னை ரெட்டேரி மேம்பாலத்தின் அடியில், கடந்த மாதம் 26ஆம் தேதி படுத்திருந்த அஸ்லாம் பாஷா என்பவரின் பிறப்புறுப்பை மர்ம நபர் ஒருவர் கடித்து துண்டித்துவிட்டு தப்பிச் சென்றான். பலத்த காயங்களுடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்ட அஸ்லாம் பாஷா, சிகிச்சை பலனின்றி இறந்தார். இதேபோல், கடந்த ஜூன் மாதம் கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரும், மர்ம நபரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்த இரு சம்பவங்களும் நடந்தபோது அப்பகுதியில் ஒரு குறிப்பிட்ட நபர் இருந்துள்ளார். எனவே, அவர் சைக்கோ கொலையாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார்,புதனன்று (ஜூன் 12) வில்லிவாக்கம் பகுதியில் அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில் அவர் மானாமதுரையைச் சேர்ந்த முனுசாமி என்பது தெரியவந்துள்ளது.
காலமானார்
சென்னை, ஜூன் 12- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி 153வது வட்டம் ஆர்.இ. நகர் கிளை உறுப்பினர் எம். நடராஜனின் தாயார் வள்ளியம்மாள் புதனன்று (ஜூன் 12) காலமானார். அவருக்கு வயது 93. அன்னாரது உடல் கோகூர் தண்டலம் பஜனை கோவில் தெருவில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வியாழனன்று (ஜூன் 13) காலை 10 மணி அளவில் அவரது இறுதி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.