tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

மீன்பிடி சங்க மாவட்ட பேரவை
சென்னை, நவ.21 - தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளர்கள் சங்கத்தின் தென்சென்னை மாவட்ட பேரவை செவ்வாயன்று (நவ.19) நொச்சிக்குப்பத்தில் நடைபெற்றது. இந்தப் பேரவையில், நொச்சிக்குப்பம் அருகிலேயே மீனவர்களுக்கான மானிய விலை டீசல் பங்க் அமைத்து தர வேண்டும், மீனவர் நலவாரி யத்திற்கென்று தனி அலுவலர் நியமித்து, தனி அலுவலகம் அமைக்க வேண்டும், தேசிய கடல் மீன்பிடி ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை மசோதா 2019ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இப்பேரவையில், தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொருளாளர் ஆர்.லோக நாதன், போர்டிஸ் மலர் மருத்துவ மனை ஊழியர் சங்கத்தின் பொதுச்செய லாளர் ஆர்.ரவி உள்ளிட்டோர் பேசினர். மாவட்டத் தலைவராக ஜெ.அன்புரோஸ், செயலாளராக எஸ்.ஜெயசங்கரன், பொருளாளராக எஸ்.பரமசிவம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வண்டலூர் பூங்காவில் சிறுநீரக பாதிப்பால்  வெள்ளைப்புலி உயிரிழப்பு
சென்னை,நவ.21- வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி மற்றும் அரியவகை உயிரி னங்கள், பறவைகள் பரா மரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு 4 வயது உடைய ‘பீமா’ எனும் வெள்ளை ப்புலி உள்பட 12 வெள்ளை ப்புலிகள் இருந்தன. கடந்த மாதம் ‘பீமா’ என்ற வெள்ளைப்புலிக்கு உடல்நிலை பாதிக்கப்ப ட்டது. கடந்த 25 நாட்களாக மருத்துவக்குழுவினர் அந்த புலிக்கு சிகிச்சை அளித்து வந்தனர். செவ்வாயன்று வெள்ளைப்புலி பரிதாப மாக இறந்தது.சிறுநீரக பாதிப்பு காரணமாக அந்த புலி இறந்து விட்டதாக வண்டலூர் பூங்கா அதிகா ரிகள் தெரிவித்துள்ளனர்.  கடந்த 25-10-19 அன்று 1 வயது சிங்கக்குட்டி ஒன்று நுரையீரல் கோளாறு காரணமாக திடீரென இறந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ‘பீமா’ என்ற வெள்ளைப்புலி சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்துள்ளது. இதுபோன்று புலி இறப்பது இதுவே முதல் முறை. எனவே அந்த வெள்ளைப்புலியின் முக்கிய உறுப்புகள் பரி சோதனைக்கு அனுப்ப ப்பட்டு உள்ளது. பூங்காவில் உள்ள மற்ற விலங்குகள் ஆரோக்கியமாக உள்ளன. எந்த பாதிப்பும் இல்லை’ என்றார்.

கலைபடைப்பாளிகளுக்காக தனிவசதி: சென்னையில்  யூ டியூப் அமைத்தது
சென்னை,நவ.21- தமிழ் உள்பட மாநில மொழிகளில் கலை அம்சமிக்க வீடியோக்களை உருவாக்குவோருக்கு யூ-டியூப் தொடர்ந்து ஆதரவு கரம் நீட்டி வரு கிறது. இதற்காக முதலீடுகளையும் அது செய்து வருகிறது. இதன் படி சென்னையில் முதல் முறை யாக யூ-டியூப் பாப் அப் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் படி யூ -டியூப் சேனல்கள் வைத்திருப்பவர்கள் யூ-டியூப்பின் தயாரிப்புக் கருவிகள், தயாரிப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி அசல் மற்றும் தரமான வீடியோக்களை தயாரிக்கலாம். யூ-டியூப் சேனல்கள் வைத்துள்ள தொடக்க நிலை பயன்பாட்டாளர்கள் சுமார் 400பேருக்கு வாய்ப்பைத்தரும் வகையில் இந்த திட்டத்தை தொடங்கியிருப்பதாக யூ-டியூப் இந்தியா நிறுவனத்தின் மூலக்கரு பிரிவின் இயக்குநர் சத்யா ராகவன் கூறினார்.தமிழகத்தில் 2018ஆம் ஆண்டில் 10லட்சம் சந்தாதாரர்களைக் கொண்ட யூ-டியூப் சேனல்தாரர்கள் 30பேர் மட்டுமே இருந்தனர். ஆனால் ஒரே ஆண்டில் குறைவான கால கட்டத்தில் 94 சேனல்தாரர்கள் 10லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தா தாரர்களை கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

கொள்ளை
சென்னை,நவ.21- ஆவடி பி.வி.புரத்தில் அய்யப்பன் கோவில் உள்ளது. புதனன்று இரவு பூஜை முடிந்து கோவிலை பூட்டி விட்டுச் சென்றனர். பின்னர் வியாழனன்று (நவ.21) காலையில் பூசாரி கோவிலை திறந்த போது அங்கிருந்த அன்னதான உண்டியல் உடைக்கப்பட்டி ருந்தது. இதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். புதனன்று இரவு மர்மநபர்கள் கோவிலில் புகுந்து உண்டியலை உடை த்து அதில் இருந்த பணத்தை யும், கோவிலில் இருந்த பூஜை பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில்   ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 6 பேர் கைது  

பூந்தமல்லி,நவ.21- வில்லிவாக்கம், திருவேங்கடம் தெருவைச் சேர்ந்தவர் பிரபாகர் (30). ஆட்டோ மெக்கானிக்கான இவர் கடந்த வாரம் நண்பர்க ளுடன் தாம்பரம்- மதுர வாயல் புற வழிச்சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டனர். அப்போது முன்னால் சென்ற லாரி மீது பிரபாகரின் ஆட்டோ மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாப மாக இறந்தார். இது குறித்து பூந்த மல்லி போக்குவரத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதலில் பலியான பிரபாகர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விட்டதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். பின்னர் விசாரணையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து ஆட்டோ ரேசில் ஈடுபட்ட வாகனங்க ளின் பதிவு எண்ணை வைத்து சுமார் 50க்கும் மேற்பட்டோரி டம்  காவல்துறையினர் விசாரித்து வந்தனர். இதில் பூந்தண்டலத்தை சேர்ந்த மதார்ஷா, வெங்கடேசன், ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த உதயா, கிண்டியை சேர்ந்த தனசேகர், அயப்பாக்கம் மகேஸ்வரன், கே.கே.நகர் கார்த்திக் ஆகிய 6 பேர் ஆட்டோ ரேசில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. பின்னர் அவர்களை காவல்துறையி னர்  கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 ஆட்டோ, கார் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ ரேசில் ஈடுபடு பவர்கள் தங்களுக்கு என தனியாக வாட்ஸ்-அப் குழு அமைத்து செயல்பட்டு உள்ளனர். அந்த குழுவில் ரேஸ் குறித்தும், அதில் பங்கெடுக்கும் ஆட்டோக்கள், பந்தயம் கட்டுபவர்கள் என தக வல்களை பறிமாறிக் கொள்வார்கள். பந்தய தூரம் 5 முதல் 15 கி.மீட்டர் வரை யும், பரிசுத் தொகை ரூ.5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ரேஸ் ஒப்பந்தத்தில் முக்கியமாக விபத்தில் சிக்கும் போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்ததாக காவல்துறை யிடம் தெரிவிக்க வேண்டும் என்பதே விதிமுறைகளில் ஒன்றாக வைத்து உள்ளனர். ஆட்டோ ரேசில் பணம் சம்பாதிப்பதை விட யார் ‘கெத்து’ என்பதை காட்டவே இந்த ரேஸ் நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ரேசில் ஈடுபட்ட மேலும் 10-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். 

மின்விநியோகத்தை சீராக பராமரிக்கும் தொழில்நுட்பம்
 சென்னை,நவ.21 மின் விநியோகத்தை சீராக பராமரிக்கும் தொழில்நுட்பம் தமிழ கத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹேவெல்ஸ் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இந்த தொழில்நுட்பத்தில் உரு வான திறன்மிக்க சர்க்யூட் சாதனங்கள் மனிதர்களால் நேரடியாகவும் தொலை உணர்வு சாதனங்கள் மூலமாகவும் இயக்கமுடி யும். இதனால் அடுக்குமாடி குடியிருப்புகள், பெரிய நிறுவனங்களில் மின்சார தேவை,எப்போது நிறுத்தவேண்டும், அளவுக்கு அதிகமான மின்னாற்றலை கட்டுப்படுத்தவும் கண்காணி க்கவும் முடியும். எங்கேயாவது மின்கசிவு இருந்தால் உடடினயாக சர்க்யூட் சாதனத்தைக் கொண்டு அணைக்கவும் முடி யும். இந்த தொழில்நுட்பம் முழுவதும் தகவல் தொழில்நு ட்பத்தோடு இணைக்கப்பட்டு ள்ளது. வீடுகளில் உள்ள மின்விநியோகத்தை நீங்கள் பணியாற்றும் அலுவலத்தில் இருந்தும் கண்காணிக்கமுடியும் என்று சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய ஹவெல்ஸ் இந்தியா தலைவர் சவுரப் கோயல் கூறினார்.  கட்டுமானம் மற்றும் உற்பத்தி துறையினருக்கு இந்த சாதனம் மிகவும் பயன்படும். பில்டிங், வயரிங், லைட்டிங், மின்சார மற்றும் நுகர்வோர் தயா ரிப்புகளில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். வீடுகளுக்கான மின்சார சாதனங்களின் விற்பனை சந்தை 12விழுக்காடு வளர்ச்சியடைய வாய்ப்பு ள்ளதாகவும்  வீட்டு உபயோக மின்சார சாதனங்க ளின் விற்பனை 15 விழுக்காடு விற்பனையாக வாய்ப்புள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.