சென்னை,ஜூலை 9- சென்னை அருகே உள்ள செங்கல்பட்டில் நவீன வசதிக ளுடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையம் 61 பேருந்து கள் நிறுத்தும் அளவிற்கு இடவசதி யுடனும், 44 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு வெண்பாக்கத்தில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலை யம் அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது.இதனால் புதிய பேருந்து நிலையம் வேண்டும் என்ற நகர மக்களின் 30 ஆண்டு கோரிக்கை விரைவில் நிறைவேற உள்ளது. சென்னை அதிக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரி சல் அதிகரித்து வருகிறது. மேலும் புறநகர் மாவட்டங்களும் சென்னைக்கு நிகரான வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டமும் வேக மாக வளர்ந்து வருகிறது. மாவட்ட தலைநகராக இருக்கக்கூடிய செங்கல்பட்டில், தற்பொழுது இருக்கும்பேருந்து நிலையம் போக்குவரத்து நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சிறிய பேருந்து நிலையமாக உள்ள செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில், சென்னை, தாம்பரம், காஞ்சிபுரம், திருப்பதி, கல்பாக்கம், மாமல்லபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன தலைநகரமாக செங்கல்பட்டு உருவெடுத்துள்ள நிலையில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவ மனை, அரசு கல்லூரிகள் மற்றும் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளி யூர் மக்கள் படையெடுக்கின்றனர்.
போக்குவரத்து நெரிசலால், வேலைக்கு செல்பவர்கள் மாணவ - மாணவிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படை கின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு தலை நகரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான திட்டம் தயாரிக் கப்பட்டு பணிகள் தொடங்கப்பட் டுள்ளன. செங்கல்பட்டில் சுமார் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணி களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு வெண்பாக்கம் பகுதியில் சுமார் 40,274 சதுர மீட்டரில் பிரமாண்ட மான புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது. இந்த புதிய பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 44 நடைமேடை களுடனும் அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. தரைத்தளம், முதல் மற்றும் 2ம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப் பட்டுள்ளது. பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் ஒரு சில மாதங்களில் பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து பேருந்து நிலைய பணிகள் குறித்து அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி களில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில், இந்த பேருந்து நிலையம் மிக முக்கிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த பேருந்து நிலையம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே அமைய உள்ளதால் பயணிகளுக்கு மிகவும் பயனு ள்ளதாக இருக்கும்.