tamilnadu

img

ரயில் பயணிகளுக்கு மலிவு விலை உணவு

சென்னை, ஏப்.24- இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழ கம் (ஐ.ஆர்.சி.டி.சி.) சார்பில் கோடைக் காலத்தில் ரயில் பய ணிகளுக்கு குறைந்த விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்பட்டு உள் ளது. 

முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளும் பயன்பெறும் வகையில் முக்கியமான ரயில்  நிலையங்களில் பொது பெட்டி கள் நிற்கும் பகுதியில் இந்த மலிவு விலை உணவுக் கடைகள்  திறக்கப்பட்டுள்ளன.

சென்னை கோட்டத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம், எழும்பூர், தாம்பரம், செங்கல் பட்டு, அரக்கோணம் என 5  ரயில் நிலையங்கள், திருச்சி  கோட்டத்தில் 3, சேலம் கோட்டத் தில் 4, மதுரை கோட்டத்தில் 2, பாலக்காடு கோட்டத்தில் 9, திருவனந்தபுரம் கோட்டத்தில் 11 என முதல் கட்டமாக 34 ரயில்  நிலையங்களில் மலிவு விலை  உணவு விற்பனை தொடங்கப் பட்டு உள்ளது.

325 கிராம் எடை அளவில் 7 பூரி, மசால், 200 கிராம் அளவு கொண்ட தயிர், எலுமிச்சை, புளி யோதரை சாதங்கள் 20 ரூபாய் விலையிலும், ஸ்னாக் மீல்ஸ் என்ற பெயரில் 350 கிராம் எடை யில் மசால் தோசை உள்ளிட்ட தென்னிந்திய உணவுகள் ரூ. 50-க்கும், 200 மில்லி தண்ணீர் பாட்டில் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

;