tamilnadu

img

பணம் வசூலித்து தரக்கோரி மின்ஊழியர் மீது தாக்குதல் ஊழியர்கள் சாலை மறியல்

சென்னை, பிப். 5- பொதுமக்களிடம் பணம் வசூலித்து தரக்கோரி மின்  ஊழியரை தாக்கிய அதிமுக  பிரமுகரை கைது செய்யக் கோரி புதனன்று (பிப்.5) ஊழி யர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சென்னை நந்தனம் சிஐடி நகர் பிரிவு-2ல் தட்சி ணாமூர்த்தி கம்பியாளராக பணியாற்றி வருகிறார். இவர்  செவ்வாயன்று (பிப்.4) நந்த னம் முதல் குறுக்குத் தெரு வில் பழுது பார்த்துக் கொண்  டிருந்தார். அதே தெருவில் வசிக்கும் அதிமுகவை சேர்ந்த ஆனைக்குட்டி ஆனந்தன், அவரது உற வினர் உதயா ஆகியோர், பழுது பார்ப்பு பணிக்கு பொதுமக்களிடம் பணம் வசூ லித்து தமக்கு தருமாறு தட்சி ணாமூர்த்தியிடம் கூறியுள்ள னர். அதற்கு தட்சிணாமூர்த்தி ஒத்துழைக்கவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ஆனைக்குட்டி ஆனந்தனும், உதயாவும் மண் சுரண்டும் கருவியைக் கொண்டு தட்சி ணாமூர்த்தியை தாக்கி யுள்ளார். இது தொடர்பான மின்வாரிய உதவி செயற்  பொறியாளர் சைதாப்  பேட்டை காவல்நிலை யத்தில், வீடியோ ஆதா ரத்தோடு புகார் அளித்தார். அதனடிப்படையில் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 332, 353 கீழ் வழக்குப் பதிவு  செய்யப்பட்டது. ஆனால்,  அவர்களை காவல்துறையி னர் கைது செய்யவில்லை. இதனைக் கண்டித்து புத னன்று (பிப்.5) சிஐடி நகர் பிரிவு-2 அலுவலக வாயிலில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்பின்னர், தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மத்திய  சென்னை கிளை நிர்வாகி கள் சீனிவாசன், கண்ணன் ஆகியோர் தலைமையில் சாலை மறியலிலும் ஈடுபட்ட னர். இந்த சம்பவத்தை அறிந்து அங்கு வந்த காவல்துறை துணை, உதவி  ஆணையாளர்கள் சங்கத்  தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்ற வாளிகளை விரைந்து கைது  செய்வதாகவும் உறுதி யளித்தனர்.