சென்னை, ஜூன் 17- பொறியியல் படிப்பு களில் சேர சிறப்பு பிரிவினருக் கான கலந்தாய்வு வரும் 20 ஆம் தேதி துவங்க இருந்த நிலையில், தரவரிசை பட்டி யல் தாமதத்தின் காரணமாக 25 ஆம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழ கத்தின் கீழ் இயங்கும் கல் லூரிகளில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு, ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலை யில், ஒரு லட்சத்து 13 ஆயி ரம் பேர் மட்டுமே சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். மேலும் சிலர் சான்றிதழ் களை சமர்ப்பித்து வருவதால், சரிபார்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரு கிறது. இதனால் திங்க ளன்று(ஜூன் 17) வெளியாக இருந்த தரவரிசை பட்டியல் வரும் 20 ஆம் தேதி வெளி யிடப்படும் என அறிவிக் கப்பட்டிருந்த நிலையில், கலந்தாய்வு துவங்கும் தேதி யும் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி வரும் 25 ஆம் தேதி மாற்றுத் திறனாளி களுக்கான கலந்தாய்வும், 26ஆம் தேதி முன்னாள் ராணு வத்தினரின் வாரிசுகளுக்கும், 27 ஆம் தேதி விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொதுப்பிரிவின ருக்கு, ஏற்கனவே அறிவித்த படி ஜூலை 3ம் தேதி தொடங்கி, 28 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள் ளது.