சென்னை, மே 21 - தென்மேற்கு வங்கக்கட லில் புதனன்று (மே 22) குறைந்த காற்றழுத்த தாழ் வுப் பகுதி உருவாக வாய்ப் புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டட தகவலில், தென்மேற்கு வங் கக்கடலில் உருவாகும் காற் றழுத்தத் தாழ்வுப் பகுதி வட கிழக்கு நோக்கி நகர்ந்து, மே 24 அன்று காலை மத்திய வங்கக்கடல் பகுதியில் காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், மே 22, 23 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என் றும், மே 24 அன்று நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட் டங்களில் கனமழைக்கு வாய்ப் புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை ஆய்வுமைய அறிக்கையை சுட்டிக்காட்டி, பேரிடர் சூழலை திறம்பட கை யாள்வதற்கு வழங்கப்பட் டுள்ள நிலையான வழிகாட்டு நடைமுறையைப் பின்பற்றி, தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், கடல் சீற்றம் அதி கமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடலுக்கு சென்றவர்கள் உடனடியாக திரும்புமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
4 நாட்களில் 11 பேர் பலி
இதனிடையே, தமிழ கத்தில் கனமழைக்கு இது வரை 11 பேர் பலியாகியுள்ள தாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக பல்வேறு மாவட்டங்களில் வெப்பம் இயல்பை விட அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், ஒரு வார காலமாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ் நாட்டில் மார்ச் முதல் மே வரை கோடைக் காலத்தில் 12.5 செ.மீ. மழை இயல்பாக பெய் யும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மே 20 வரை 9.63 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது. இது இயல்பை விட 7 சதவிகிதம் குறைவே ஆகும்.
எனினும், கடலூர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்க ளில் இடி, மின்னல் தாக்கிய தன் காரணமாக இரண்டு உயி ரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. கடலூரில் மின்னல் தாக்கி ஒருவரும் கன்னியாகுமரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் ஒருவரும் பலியாகி உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் கன மழை காரணமாக 11 உயிரி ழப்புகள் ஏற்பட்டுள்ளன. 12 கால்நடைகள் இறந்துள்ளன. 24 குடிசைகள் மற்றும் வீடு கள் சேதமடைந்துள்ளன என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை தெரி வித்துள்ளது.