tamilnadu

img

தென்மேற்கு பருவக்காற்றால் மழைக்கு வாய்ப்பு

சென்னை:
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக வட தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், கோவை, நீலகிரி மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.வடக்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய ஒடிசா, மேற்கு வங்க கடலொரப் பகுதியில் புதன்கிழமை (ஆக.19) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால் 20 ஆம் தேதி வரை 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால், அங்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் கேட்டுக் கொண்டுள்ளது.