மத்திய அரசின் வரைவு தேசிய கல்விக் கொள்கை-2019ஐ திரும்ப பெற வலியுறுத்தி செவ்வாயன்று (ஜூன் 25) நாடு முழுவதும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை பல்கலைக் கழக வாயிலில் மாணவர்கள் நகல் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் தீ.சந்துரு (தென்சென்னை), இசக்கி நாகராஜ் (வடசென்னை), மாநிலக்குழு உறுப்பினர் சுபாஷ் உள்ளிட்டோர் பேசினர்.