tamilnadu

img

பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் மத்திய அதிகாரிகள் ஆய்வு

சென்னை:
சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் பகுதியில் மத்திய நீர்வள பாதுகாப்பு ஆணையத்தின் அணைகள் ஆய்வுக்குழுவின் இணைச் செயலாளர் நீவா சிங் ஆய்வு மேற்கொண்டார்.பாரம்பரிய நீர் நிலைகள், நீர் ஆதாரங்களைப் புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு, மரம் வளர்த்தலை ஊக்குவித்தல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ள மத்திய அரசின் ஜல் சக்தி அபியான்  திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 255 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்பு குழுக்கள் மூலம் நீர் மேலாண்மை பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மத்திய நீர்வள பாதுகாப்பு ஆணையத்தின் அணைகள் ஆய்வுக்குழு இணை செயலாளர் நீவா சிங் சென்னை பள்ளிகரணை சதுப்பு நிலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,  ஜல் சக்தி அபியான் திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு சிறப்புக்கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.