புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால், ஒன்றிய அரசின் சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய முதல் தவணை தொகையான ரூ.573 கோடியை ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் சர்வ சிக்ஷா அபியான் (SSA) திட்டத்தித்தை அமல்படுத்த திட்டக்குழு ரூ.3,586 கோடி ஒதுக்கியது. இதில் ஒன்றிய அரசின் பங்கு ரூ.2,152 கோடி (60%), மாநில அரசின் பங்கு ரூ.1,434 கோடி (40%) ஆகும்.
2024-25 கல்வியாண்டில் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு 4 தவணைகளில் ரூ.2,152 கோடி வழங்க வேண்டும். முதல் தவணையாக ரூ.573 கோடியை ஜூன் மாதமே வழங்க வேண்டிய நிலையில், புதிய கல்விக்கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டிற்கு இன்னும் நிதி தரப்படவில்லை. ஒன்றிய அரசின் இந்த செயலுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.