tamilnadu

திரையரங்குகளில் சிசிடிவி: அமைச்சர்

சென்னை, அக்.3- தமிழ்நாட்டின் எல்லைகளை வரையறுத்த  ம.பொ.சி யின் புகழ், தமிழ் உள்ளவரை நிலைத்து இருக்கும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை மைலாப்பூரில் 1906 ஆம்  ஆண்டு பிறந்த மபொசி என்றழைக்கப்படும் ம.பொ. சிவஞானம் சுதந்திரப்போராட்ட வீரரும், தமிழறிஞரும் ஆவார். சிலப்பதி காரத்தின் மீது இவர் கொண்ட ஆளுமை யால் சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்பட் டார். எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த போது தமிழக சட்டமன்ற மேலவை தலைவராக்கி சிறப்பு செய்தார். மபொசியின் 24 வது நினைவு தினத்தையொட்டி தியாகராய நகரில் உள்ள  அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார்  வல்லபாய் பட்டேல் என்றால் தமிழ்நாட்டின் இரும்பு மனிதர் ம. பொ. சிவஞானம் என்று புகழ் மாலை சூட்டினார். திரையரங்குகளில் அதிக விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுவதை கட்டுப்படுத்தப்படுவதுடன், தீபாவளிக்குள் அனைத்து திரையரங்கிலும் சிசிடிவி பொருத்துவதற்கான பணி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜூ மேலும் தெரிவித்துள்ளார்.