tamilnadu

நீதிமன்றங்களில் சிசிடிவி கேமராக்கள்: அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவிப்பு

 சென்னை, ஜூலை 9- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நீதி மன்றங்களிலும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். சட்டப்பேரவையில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச் சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீதான விவா தத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், “தமிழ்நாட்டில், தற்போது 85 சதவீத நீதிமன்றங்கள் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.  தாலுகா நீதிமன்றங்கள் மற்றும் மேஜிஸ்திரேட் நீதிமன்றங்களில், காலி யாக உள்ள பணியிடங்களில், நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அனைத்து நீதிமன்றங்களிலும் சிசிடிவி  கேமராக்கள் பொருத்த 37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார். புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அவர் தருமபுரி, விழுப்புரம், சிவகங்கை,  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்க ளில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மூன்றரை  கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்ப டும் என்றார். சென்னைக்கு அருகே புதுப்பாக்கத்தில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு  சட்டக்கல்லூரி , தருமபுரி மற்றும் விழுப்புரம்  அரசு சட்டக்கல்லூரிகளில் முதுகலை சட்டப்படிப்பு துவங்கப்படும் என்று அமைச்சர் கூறினார். திருப்பூர் மற்றும் முசிறியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களும், கள்ளக்குறிச்சி, பாப்பிரெட்டிப்பட்டி மற்றும்  நாங்குநேரியில் சார்பு நீதிமன்றங்களும் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.