tamilnadu

img

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு: சிபிஐ-க்கு மாற்றம்

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்தனர். இவ்வழக்கில் விஷச் சாராயத்தை விற்பனை செய்த கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த கன்னுக்குட்டி எனும் கோவிந்தராஜ், அவரின் மனைவி விஜயா, அவரது சகோதரர் தாமோதரன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து வழக்கை சிபிசிஐடி மாற்றி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி போலீசார், மெத்தனாலை சப்ளை செய்த விவகாரத்தில் சின்னத்துரை, ஜோசப் ராஜா, மதன் குமார், மாதேஷ் ஆகியோர் கைது செய்தனர்.
இதற்கிடையில், இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக, பா.ஜ.க மற்றும் பாமக சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கியுள்ளனர்.