சென்னை, மார்ச் 5- 2024-2025ஆம் கல்வியாண் டில் ஆறாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு பள்ளியிலேயே வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டு, ஆதார் புதுப்பித்தல் செய் யப்பட்டு ஆதார் பதிவை வங்கிக் கணக்குடன் இணைக்கும் பணி களும் மேற்கொள்ளப்படும்; அத் துடன், நால்வகைச் சான்றிதழ் களும் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன் பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
“பள்ளியில் பயிலும் மாணவர் கள் உதவித்தொகையை பெறு வதற்கு விண்ணப்பிக்கும் போதும் பள்ளிப்படிப்பை முடித்து உயர் கல்வி பயில்வதற்கு விண்ணப்பிக் கும் நேர்விலும், வேலைவாய்ப் பிற்கு விண்ணப்பிக்கும் தருணத்தி லும் சாதிச்சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரியாக இருப்பின் அதற்குரிய சான்றிதழ் என நால்வகைச் சான்றிதழ்கள் அவசியமாகின்றன.
இந்த நால்வகைச் சான்றிதழ் களைப் பெறுவதற்கு தற்போது அரசு இ-சேவை மையங்கள் வாயி லாக விண்ணப்பித்து தேவை யான சான்றிதழ்களைப் பெற்று வருகின்றனர்.
பெற்றோர்களுக்கும், மாண வர்களுக்கும் இதற்கான சிர மத்தைக் குறைத்திடும் வகையில், மாணவர்கள் படிக்கும் அந்தந்தப் பள்ளிகளிலேயே வரும் கல்வி யாண்டில் (2024-2025) ஆறாம் வகுப்பில் சேரும்போதே, தேவை யான ஆவணங்களை பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக் கும்போது அதன் விவரங்கள் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) தளத்தில் உள் ளீடு செய்யப்பட்டு வருவாய்த் துறையினருக்கு அனுப்பி வைக் கப்படும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு (EMIS) தளத்தின் வாயிலா கவே பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டு உரிய மாணவர்கள் வசம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நல்வாய்ப்பை அனைத்து மாணவர்களும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கி றேன்” என அமைச்சர் குறிப்பிட் டுள்ளார்.