tamilnadu

பண நிலுவைகளை விரைந்து வழங்க வேண்டும் அனல் மின்நிலைய ஊழியர்கள் கோரிக்கை

சென்னை, ஆக. 1- அனல்மின் நிலையம் மூடப்பட்டதால், அங்கிருந்து நிரந்தரமாக மாறுதலான ஊழி யர்களுக்கு பணப்பயன்களை விரைந்து வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் வலி யுறுத்தி உள்ளனர். சென்னை, எண்ணூர் அனல்மின் நிலை யம் துவங்கி 45 ஆண்டுகளை கடந்ததால்  2017ம் ஆண்டு மூடப்பட்டது. இங்கு வேலை  பார்த்த 105 பேரை தவிர்த்து 530 ஊழியர்கள்,  வடசென்னை அனல் மின் நிலைய அலகு 1  மற்றும் 2க்கு தற்காலிகமாக மாற்றப்பட்டனர்.  இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் உட்பட  அனைவருக்குமான சம்பளம், பணப்பயன், சேவை உள்ளிட்டவைகளை வழங்கும் நிர்  வாக அலுவலகம், கணக்கு பிரிவுகள் எண்ணூர் அனல் மின் நிலைய வளாகத்தி லேயே செயல்பட்டது. இந்நிலையில், வடசென்னை அனல் மின்  நிலையம் அலகு ஒன்றிற்கு 180 பேர், இரண்டிற்கு 182 பேர், மூன்றிற்கு 63 பேர் என  ஊழியர்கள் நிரந்தரமாக இடமாற்றம் செய்  யப்பட்டனர். இவர்களுக்கான பணப்பயன் கள், சம்பளம் உள்ளிடவைகளும் இனி  அந்தந்த நிலையங்களிலேயே வழங்கப்ப டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதுவரை ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய, வருங்கால வைப்பு நிதி,  இரண்டு கோடி ரூபாய், ஈட்டு விடுப்பு 58 லட்சம்  ரூபாய் போன்றவற்றை எண்ணூர் அனல் மின்நிலைய நிர்வாகம் கடந்த சில மாதங்க ளாக வழங்காமல் உள்ளது. எனவே, நிலுவை களை விரைந்து வழங்க வேண்டும் என்று ஊழியர்கள் கோருகின்றனர்.