tamilnadu

img

ஓ.பி.எஸ் மகன் வெற்றியை எதிர்த்து வழக்கு

 சென்னை, டிச. 11- தேனி தொகுதி எம்பியாக ரவீந்திரநாத் குமார்  வெற்றி பெற்றதை எதிர்த்து, மிலானி என்ற வாக்கா ளர் தொடர்ந்த வழக்கில், பதில் மனு தாக்கல் செய்ய ஜனவரி 23 ஆம் தேதி கடைசி கெடு  விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு  புதனன்று(டிச.11) விசாரணைக்கு வந்தபோது, மிலானி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்  பட்டது. அதில், விசாரணையை இழுத்தடிப்ப தற்காகவே ரவீந்திரநாத் குமார் பதில் மனு தாக்கல் செய்யவில்லை என்றும், பதில் மனு  தாக்கல் செய்யும் வரை எம்.பி பதவி வகிப்பதை தற்காலிகமாக நிறுத்திவைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, பதில் மனு தாக்கல் செய்ய  ஜனவரி 23 ஆம் தேதி வரை கடைசி கெடு விதித்து  நீதிபதி உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.

;