மயிலாடுதுறை,மார்ச் 29 - மயிலாடுதுறை - தரங்கம்பாடி ரயில் சேவையை காரைக்கால் வரை நீட்டிக்க நடவடிக்கை எடுப்பேன் என செயல்வீரர்கள் கூட்டத்தில் மயிலாடு துறை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா உறுதியளித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மயிலாடுதுறை நாடா ளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிடுகிறார். வேட்பாளர் சுதாவை அறிமுகப் படுத்தும் செயல்வீரர்கள் கூட்டம் வெள்ளியன்று மயிலாடுதுறை சிக் னேச்சர் மண்டபத்தில் நடைபெற்றது.
திமுக மாவட்டச் செயலாளரும், பூம் புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், திமுக தஞ்சை வடக்கு மாவட்டச் செயலாளரும், எம்.பி.,யுமான சு.கல்யாணசுந்தரம் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்.பி., செ. இராமலிங்கம், உறுப்பினர்கள் கோவி. செழியன் (திருவிடைமருதூர்), க.அன் பழகன் (கும்பகோணம்), எம்.பன்னீர் செல்வம் (சீர்காழி), காங்கிரஸ் மாவட்டத் தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ராஜகுமார், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் குத்தாலம் பி.கல்யாணம், பூம்புகார் தொகுதி திமுக தேர்தல் பொ றுப்பாளர் என்.இளையராஜா ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் (மயிலாடுதுறை), சின்னை.பாண்டியன்(தஞ்சாவூர்) மற்றும் சிபிஐ, விசிக, மதிமுக, திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், மனித நேய மக்கள் கட்சி உட்பட இந்தியா கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆதரவு தெரிவித்து உரையாற்றினர்.
ஆதரவளித்து பேசிய தலைவர் களுக்கு நன்றி தெரிவித்தும், வாக்குக் கேட்டும் மயிலாடுதுறை தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா உரை யாற்றினார். அப்போது அவர் பேசுகை யில், “ஏற்கனவே மயிலாடுதுறை முதல் தரங்கம்பாடி வரை இயங்கிய ரயில் சேவை யை காரைக்கால் வரை நீட்டித்து இயக் கிடவும், புதிய மாவட்டமான மயிலாடு துறையில் மருத்துவக் கல்லூரி அமைக் கவும், கும்பகோணத்தை தலைமை யிடமாக கொண்டு புதிய மாவட்டம் உரு வாக்கவும் பாடுபடுவேன்” என உறுதி யளித்தார்.