tamilnadu

img

சென்னை முக்கிய செய்திகள்

புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்!

சென்னை, ஜுன் 29-  உயிர்க்கொல்லி நோயான புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் சென்னையில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  நிறுவனத்தின் (டிசிஎஸ்)  ஐந்தாயிரம் பணி யாளர்கள்  கலந்து கொண்ட ஓட்டம் நடை பெற்றது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள  காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு ஓட்ட நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில், புற்றுநோய் பற்றி தங்களுக்குத் தாங்களே கற்பித்துக் கொள்ளவும் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இதுகுறித்த செய்தியை எடுத்துச்சென்று அவர்களிடம் விழிப்புணர்வை பரப்பவும் பங்கேற்பாளர்கள் உறுதியேற்றனர். புற்றுநோய் பாதிப்புடன் வாழ்ந்து வரும் நபர்களுக்கு சிகிச்சை விளைவு களை மேம்படுத்துவதும், பாதிப்பிலிருந்து மீண்டு நம்பிக்கையுடன் வாழ்க்கைப்பயணத்தை தொடர்வதில் அவர்களுக்கு ஆதரவளிப்பதும் இந்த முன்னெடுப்பு நடவடிக்கையின் நோக்கமாகும் என்று டிசிஎஸ் துணைத் தலைவர் சுரேஷ் ராமன் கூறினார்.

கனடாவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு வங்கி சேவை

சென்னை, ஜூன் 29- கனடாவில் உயர்கல்வி படிக்கும் இந்திய மாணவர் களுக்கு வங்கி அனுபவத்தை எளிதாக்கும் வகையில் டிடி  பேங்க் உடன் எம்பவர் பைனான்சிங் நிறுவனம் இணைந்துள்ளது.  

 இந்த கூட்டாண்மையின் மூலம் எம்பவர் நிறுவனம், டிடி  பேங்க் உடன் இணைந்து கனடாவில் உள்ள பல்கலைக் கழகங்களில் உயர் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு டிடி இன்டர்நேஷனல் ஸ்டூடண்ட் பேங்கிங் பேக்கேஜ் திட்டத்தின் மூலம்  உதவ உள்ளது. சர்வதேச மாணவர்கள்  கனடாவில் இரண்டாம் நிலை கல்விக்கு மாறும்போது அவர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் வங்கிச்சேவையும் இதர சேவைகளும் கிடைக்கும் என்று டிடி வங்கியும் எம்பவர் பைனான்சிங் நிறுவனமும் அறிவித்துள்ளன.

பைக் மீது லாரி மோதி வியாபாரி பலி

திருவள்ளூர், ஜூன் 29- திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த வேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் பழனி (வயது 56).  இவர், சென்னை செங்குன் றத்தில் மின் சாதனங்களை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். 

இவருக்கு கிரிஜா என்ற மனைவியும், 2 மகள் களும் உள்ளனர். வெள்ளியன்று இரவு கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் பழனி  வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி அருகே வரும்போது அதே திசையில் பின்னால் வந்த லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பழனி  உயிரிழந்தார். அவரது  உடல் பிரேத பரிசோதனைக் காக பொன்னேரி அரசு  பொதுமருத்துவனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கவரைப் பேட்டை காவல்துறை யினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.